- தாண்டி. தொண்டு
- பல்நோக்கு சேவை மையம்
- தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியர் சங்கம்
- தொண்டி
- தின மலர்
தொண்டி, அக். 7: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்நோக்கு சேவை மையம் விவசாய உள் கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வாகனங்கள் வாங்க நிர்பந்தபடுத்துவதை கண்டித்து தொண்டி தொடக்க கூட்டுறவு வங்கி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 132 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளது.
அனைத்து சங்கங்களும் பல் நோக்கு சேவை மையம் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் லாரி, டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்டவை வாங்கி அதை வாடகைக்கு விட்டு லாபம் ஈட்ட வேண்டும் என நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு வங்கிகள் மேலும் இவற்றை வாங்க நஷ்டப்பட விருப்பம் இல்லாமல் இத்திட்டத்தை மறுத்துள்ளனர்.
மேலும் விருப்பம் உள்ள வங்கிகள் மட்டும் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்க கோரினர். இதை ஏற்க்காததால் கடந்த 3 தேதி லாரி , கதிர் அருக்கும் இயந்திரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post தொண்டியில் கூட்டுறவு சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.